வெள்ளி, நவம்பர் 14, 2014

பேறு காலத்திற்கு முந்தைய உடல் நலம் (Preconceptional Health)
renugaதாய்மை ஒரு வரம்.அநேகமாக உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே தாய்மையைக் கொண்டாடுகின்றன. ஓர் இனம், சவால்களை மீறி தன்னைப் பெருக்கிக் கொள்வதற்கு தாய்மையே அடிப்படை.
இயல்பிலேயே பெண் அனைத்தையும் மறு உற்பத்தி செய்பவள். அவள் தனக்காக மட்டும் சிந்திப்பதில்லை. எதிர்காலத் தலைமுறைக்காகவும் சிந்திக்கிறாள். தலைமுறை தலைமுறையாக வளர்ச்சியைப் பெற்று வருவதற்கு பெண்ணின் இந்த இயல்பே காரணமாகும். இந்தப் பண்பினைப் போற்ற வேண்டியது நமது கடமையாகும்.
ஒரு பெண் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சரியாக இருக்கும்போதுதான் நல்ல ஆரோக்கியமான, புத்திசாலியான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். ஒரு பெண் தாயாவது என்பது இயல்பான ஒன்று. இருந்த போதிலும் ஒரு பெண் தாயாவதற்கு தன்னை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இச்சவாலை எவ்வாறு திறம்பட எதிர்கொள்வது, இது சம்பந்தமாக நாம் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன போன்ற கேள்விகளோடு, மகப்பேறு நிபுணர்,
டாக்டர். திருமதி. R. ரேணுகா தேவி M.B.B.S., DGO. அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
டாக்டர். திருமதி. R. ரேணுகா தேவி அவர்கள் தமது M.B.B.S., கல்வியை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்றவர். மகப்பேறு மருத்துவத்தில் பட்டயப் படிப்பை மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். பெண்கள் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவத் துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்புற பணியாற்றி வருகிறார். மேலும் தொடர்புக்கு:
இலக்கம் 3,
கௌதம் செண்டர் அனெக்ஸ்,
1054, அவினாசி சாலை,
கோவை- 641 018
போன்: 0422- 2241138, 2242244
டாக்டர், ஒரு பெண் தாயாவது என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு. முக்கியமான நிகழ்வும் கூட. ஒரு பெண் தாயாவதற்கு முன்பு அதாவது மகப்பேறுக்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
9161099மகப்பேறுக்கு முந்திய பெண்ணின் நலம் என்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும் .ஏனெனில் மகப்பேறுக்கு முந்தைய காலங்களில் நாம் நடந்து கொள்வதில்தான் நமது குழந்தையின் எதிர்காலமே உள்ளது. இது பெண் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. ஆணிற்கும் இதில் முக்கியமான பங்கு உள்ளது.
பேறுகாலத்திற்கு முந்தைய உடல் நலம்(Preconceptional Health)
என்பது ஒரு ஆணோ அல்லது பெண்ணோ நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க, மருத்துவரைக் கலந்தாலோசித்து அவரின் மருத்துவ அறிவுரைகளைப் பின்பற்றுவதாகும். ஆனால், உண்மையில் நாம் இதற்கு அவ்வளவாக மெனக்கெடுவதில்லை. “பேறுகாலத்திற்கு முந்தைய நலம்” என்பது ஒவ்வொரு ஆணிற்கும், பெண்ணிற்கும் வேறுபடும். அவர்களின் வயது, உடல் நிலை, உணவுப் பழக்கங்கள், வேலை முறை போன்றவற்றை கவனத்தில் கொண்டு மருத்துவர் சில மருத்துவ முறைகளையோ அல்லது தொடர்ச்சியான மருத்துவ நடவடிக்கைகளையோ பரிந்துரைப்பார். அந்த சமயத்தில் நாம் பின்பற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்கள் மற்றும் பின்பற்றக்கூடாத பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் பரிந்துரைப்பார்.
எனவே, மகப்பேறுக்குத் தயாராகும் தம்பதிகள் தாய்மைப் பேறு, அதில் அடங்கியுள்ள சிக்கல்கள், அபாய காரணிகள், உடல் நலக் கோளாறுகள், குழந்தையைப் பாதிக்கக்கூடிய காரணிகள் போன்றவற்றை மகப்பேறு மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெற வேண்டும்.
பயப்படாதீர்கள்! மகப்பேறு என்பது மிகவும் இயல்பான ஒன்று. உங்கள் மகப்பேறு மருத்துவர் உங்களுக்கு நல்ல ஆலோசனை வழங்குவார்.
டாக்டர், குழந்தைப் பேறுக்கு தயாராவதற்கு முன்பு நாம் கடைப்பிடிக்க வேண்டியவைகளைப் பற்றி கூறுங்களேன்?
Diagnostics2குழந்தைப் பேறு வேண்டும் தம்பதிகள் மூன்று மாதங்களுக்கு முன்னரே, புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்றவைகளை அறவே விட்டுவிட வேண்டும். சரியான எடையைப் பராமரிக்க வேண்டும்.
உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் உங்களைப் பற்றிய உடல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் மனரீதியானப் பிரச்சினைகளைத் தெரிவித்து விடுங்கள். தற்போது சிகிச்சை பெற்றுவரும் நோய்களைத் தவறாது கூறுங்கள். அதற்கும் குழந்தைப் பேறுக்கும் சம்பந்தமில்லை என்று நீங்களாகவே முடிவு செய்யாதீர்கள். தவிரவும் அவை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா அல்லது குணப்படுத்தப்பட்டுள்ளதா என்று உறுதி செய்யுங்கள். குறிப்பாக AIDS, டயாபடீஸ், தைராய்டு கோளாறுகள், மரபு வழிக் கோளாறுகள் குறிப்பாக வலிப்புநோய்(Seize Disorder), அதிக இரத்த அழுத்தம், மூட்டு நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைப் பற்றி உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் சொல்லியே ஆக வேண்டும்.
தினசரி 400 மைக்ரோ கிராமிலிருந்து 800 மைக்ரோ கிராம் வரை போலிக் அமிலம், அதாவது வைட்டமின் B9 எடுத்துக் கொள்ளுங்கள். இது பிறக்கப்போகும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் முதுகெலும்பிற்கும் நல்லது.
தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்களைக் கையாள்வதோ அல்லது அது மாதிரியான சூழல்களில் வேலை செய்வதையோ தவிர்த்து விடுங்கள்.
டாக்டர், இதில் ஆணுக்கு எதுவும் பங்கில்லையா?
c41p76-1நிச்சயமாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆணுக்கும் பங்குண்டு. உண்மையில் ஆணின் பங்களிப்பை பெண் பெரிதும் விரும்புகிறாள். கருத்தரிப்பதற்கு முன்னரே தம்பதிகள் இருவரும் கலந்தாலோசித்து திட்டமிட வேண்டும்.
ஆண்கள் குறிப்பாக புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப் பழக்கம் இருப்பின் அதை அறவே கைவிடுவது போன்றவை கட்டாயமாகும்.
பெண்ணின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது, அவள் அருகாமையில் இருப்பது போன்றவை மனரீதியான பாதுகாப்பை அவளுக்கு அளிக்கும். வெறுமனே மாத்திரையை எடுத்துக் கொடுத்துவிட்டு டிவி பார்ப்பதோ அல்லது பேப்பர் படிப்பதோ வேண்டாம். சரியான மாத்திரை சாப்பிடுகிறார்களா, நன்றாக உணவு அருந்தினார்களா என்று அக்கரையோடு விசாரியுங்கள். அதற்கு உதவுங்கள்.
தவிரவும், மருத்துவ ரீதியான காரணங்களும் உள்ளன. கருத்தரிப்பிற்குத் தயாராவதற்கு முன்பு பெண்களைப் போலவே ஆண்களும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக பால்வினை நோய்கள் ஏதாவது உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
தங்களுக்கு தற்போதுள்ள நோய்களைப் பற்றியும், தாங்கள் தற்போது உட்கொண்டு வரும் மருந்துகளைப் பற்றியும் தங்களது மருத்துவரிடம் தவறாது தெரிவித்து விடுங்கள்.
நீங்கள் உடலுக்கு கேடுவிளைவிக்கும் வேதி பொருட்கள் உற்பத்தி செய்யும் வேலையிடங்களில் பணியாற்றினால் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பணியின்போது நீங்கள் உபயோகப்படுத்தும் ஆடைகளையும், வீட்டில் அணியும் ஆடைகளையும் தனித்தனியே துவைத்துக் கொள்வது நல்லது.
டாக்டர், பேறு காலத்திற்கு முன்பு தடுப்பூசிகள் ஏதாவது போட வேண்டுமா?
khashayar20100919134127043கருத்தரிப்பதற்கு 3 லிருந்து 6 மாதங்களுக்கு முன்னரே இதைப் பற்றித் திட்டமிடவேண்டும். மஞ்சள் காமாலை தடுப்பூசி அதாவது ஹெபாடிடஸ் B, ரூபெல்லா, அம்மை போன்ற நோய்களிலிருந்து நம்மையும் நமக்குப் பிறக்கப்போகும் குழந்தையையும் காக்க தடுப்பூசி அவசியம். இதைப் பற்றி தங்கள் மருத்துவர் தங்களிடம் தெளிவாக விளக்குவார். தேவைப்படின், கால மாற்றத்திற்கேற்ப அவர் மேலும் தடுப்பூசிகளைப் பரிந்துரைக்கலாம். எது தேவை எது தேவையற்றது என்பதை உங்கள் மகப்பேறு மருத்துவர்தான் முடிவெடுக்க வேண்டும்.
டாக்டர், மரபு வழி ஆலோசனை (Genetic Counseling) என்பதைப் பற்றி இப்போது எல்லோரும் பரவலாகப் பேசுகிறார்கள். அதைப் பற்றிக் கூற முடியுமா?
nrg-providersஆம். தற்போது இது பரவலாகப் பேசப்படுகிறது. நமது குழந்தையின் ஜீன்கள் நமது குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கக்கூடும். ஒரு குறிப்பிட்ட ஜீனில் ஏற்படும்குறைபாடுகள் அல்லது குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவை மரபு வழியில் ஏற்படலாம். உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதேபோல் உங்கள் துணைக்கோ அல்லது அவர்தம் குடும்பதினருக்கோ ஏதாவது பிறவிக் குறைபாடு இருந்தால், நீங்கள் கர்ப்பமடைவதற்கு முன்னமேயே உங்கள் டாக்டரிடம் தெரிவித்து விடுங்கள். இந்தத் தகவல் உங்கள் குழந்தைக்கு என்ன மாதிரியான அபாய காரணியைத் தோற்றுவிக்கும் என்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வர அவருக்கு உதவியாய் இருக்கும்.
உங்கள் அல்லது உங்கள் துணை இருவரில் யாருடைய குடும்பத்தினருக்கும் கீழ்க்கண்ட பிரச்சினைகள் இருந்தாலும் உங்களுக்கு மரபு வழி ஆலோசனை தேவைப்படலாம்.
• பிறவிக் குறைபாடுகள், குரோமோசோம் குறைபாடுகள் அல்லது புற்று நோய்
• இரண்டு முறை அல்லது அதற்கு மேலும் கருத்தங்காமல் போகும்போது அல்லது கருவில் இறந்து போதல்
• 35 வயதுக்கு மேல் தாயாகும் தாய்மார்கள்
• நெருங்கிய இரத்த உறவில் திருமணம்
ஆனால் இதைப்பற்றிய முடிவு எடுக்க வேண்டியது உங்கள் மருத்துவர்தான்.
குழந்தைப் பேறு விரும்பும் தம்பதியருக்கு தாங்கள் கூறும் பொதுவான ஆலோசனைகள்?
pregnant-womanஇன்றைய நவீன மருத்துவத்தில் பிரசவம் என்பது மிக எளிதாய் மாறியிருக்கிறது. பயப்படாதீர்கள். இது மிகவும் இயல்பானது. மனதை சந்தோசமாய் வைத்துக் கொள்ளுங்கள். நல்ல புத்தகங்கள் படியுங்கள். நல்ல இசையைக் கேளுங்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். எந்தவித சந்தேகம் இருப்பினும் உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கேளுங்கள். கூச்சப்பட்டுக் கொண்டு அமைதியாய் இருக்காதீர்கள். ஏனெனில் இது நீங்கள் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அடுத்த தலைமுறை சம்பந்தப்பட்டது. Good luck.

டாக்டர் சொல்வதைக் கேளுங்க! பற்களை பாதுகாத்திடுங்க!!
dr karthi
பொதுவாக நாம் வாய்ச் சுகாதாரம் எனப்படும் ORAL HEALTH க்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஆனால், உண்மையில் நமது உடல் நலனை காப்பதில் வாய்ச் சுகாதாரம் முக்கியப் பங்காற்றுகிறது. தவிரவும்,நமது வாய்ச் சுகாதாரத்தைப் பற்றிய தவறான புரிதல்களையும் நாம் கொண்டுள்ளோம். எனவே இதைப் பற்றி மேலும் அறிதல் பொருட்டு கோவை, காளப்பட்டி ரோட்டில் உள்ள SPAARK DENTAL CLINIC ஐ சேர்ந்தDr.R.கார்த்திகேயன் அவர்களைச் சந்திதோம்.
Dr. R. கார்த்திகேயன் M.D.S.., இவர் குழந்தைகளுக்கான பல் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.மேலும் தொடர்புக்கு விறலியைச் சொடுக்கவும். www.spaarkdental.com   Ph: 98888 88552.
டாக்டர்,  பற்காரை (TARTAR) என்றால் என்ன? அதனை எவ்வாறு நீக்குவது?
tartar
நாம் உணவு உண்ணும்போது உணவுத் துணுக்குகள் கால்சியத்துடன் வினை புரிந்து நமது பற்களில் காரையாய்ப் படிகின்றன. நாம் சாதாரணமாக பிரஷ் செய்யும்போது இது நீங்குவதில்லை. அவை கடினமாய் இருப்பதால் பல் மருத்துவர் மட்டுமே நவீன கருவிகள் துணை கொண்டு அதனைக் களைய முடியும். பற்காரையிலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது பல்வேறு ஈறு நோய்களுக்கு காரணமாகிறது.
டாக்டர், தீவிரமாகப் பாதிக்கப்பட்ட பற்களை சரிசெய்ய முடியுமா?
நவீன பல் மருத்துவத்தில் இது சாத்தியமே! தற்போது இதற்கான புதிய சிகிச்சை முறைகள் உள்ளன. உங்கள் பல் மருத்துவரை கலந்து ஆலோசித்தபின் சரியான முடிவை எடுக்கவும்.
டாக்டர், ஈறு நோய் என்றால் என்ன? இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
நாம் உண்ணும் உணவின் மென்மையான மற்றும் கடினமான உணவுத் துணுக்குகள் நமது பற்களில் சிக்கிக் கொள்கின்றன. பாக்டிரியாக்கள் அவற்றுடன் வினை புரிகின்றன. இதன் மூலம் ஈறுகளில் வலி, ஈற்கள் சிகப்பாதல் மற்றும் ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன. இவ்வாறுதான் ஈறு நோய் ஆரம்பமாகிறது.சரியாக கவனிக்காத பட்சத்தில் ஈறுகளுக்கு அடியிலுள்ள எலும்புகளுக்கும் பரவுகிறது. விளைவு? நாம் நமது பற்களை இழக்க நேரிடலாம்.
டாக்டர்FLOSSING என்றால் என்ன?
flossing_lady_sm3
FLOSSING என்பது விசேஷமாக உருவாக்கப்பட்ட ஒரு நூல். இரண்டு  பற்களுக்கிடையே உள்ள அழுக்கை அகற்ற உதவுகிறது. இந்த நூலை இரு பற்களுக்கிடையே செலுத்தி முன்னும் பின்னும் இழுப்பதன் மூலம் பற்களை சுத்தம் செய்ய முடியும். இவ்வாறு FLOSSING செய்வதன் மூலம் பற்களின் இண்டு இடுக்குகளில் உள்ள அழுக்கைக் கூட அகற்ற முடியும். இதன் மூலம் அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய பற்சிதைவை தடுக்க முடியும்.
டாக்டர், கிளிப் அணிவதற்கு எது சரியான வயது?
clipping
பொருந்தாப் பல் அமைப்பு (malocclusion) என்பதை நாம் கண்டறிந்த உடனேயே பல் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையின் 12-13 வயதினை சரியான வயது என்று நினைக்கிறார்கள்.இது தவறு. அந்த வயதுகளில் குழந்தையின் வளர்ச்சி என்பது அனேகமாக முழுமை அடைந்திருக்கும். எனவே அதன் பொருட்டு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
டாக்டர், எப்பொழுதிலிருந்து நாம் பல் மருத்துவரை பார்க்கத் தொடங்க வேண்டும்?
உண்மையில் நமது பல் மருத்துவருடனான சந்திப்பு நாம் குழந்தையாய் இருக்கும்போதே தொடங்கப்பட வேண்டும். குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கும்போதோ அல்லது முதல் பல் தோன்றும்போதோ நாம் நமது பல் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனைக்கு செல்ல வேண்டும். குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது நமது பற்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.


டாக்டர் சொல்வதைக் கேளுங்க!
மனசை ஜாலியா வச்சுக்குங்க!!
tunnel_wide-d4b8f634e40e113dc68ea83806d748c1c6c320e1-s40-c85
” மச்சி , ஒரு க்வாட்டர் சொல்லேன், செம டென்ஷனா இருக்கு” என்று நமதுநண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். பள்ளி செல்லும் குழந்தைகள் கூட,
” அம்மா, ஒரே டிப்ரஷனா இருக்கும்மா”  என்று சொல்கிறார்கள். ” ஓவர் ஸ்ட்ரெஸ்சார், வேலையே செய்ய முடியல” என்று நமது சக பணியாளர்கள் சொல்வதையும்கேட்கிறோம். டென்ஷன், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் போன்ற மன நலன் சார்ந்தவார்த்தைகளை நமது தினசரி வாழ்க்கையில் கலந்து கட்டிப் பயன்படுத்துகிறோம்.
ஆனால்உண்மையில் ஒவ்வொரு வார்த்தையும் வெவ்வேறு விதமான பொருளைக்கொண்டிருக்கிறது. பொதுவாக மனநலன் சார்ந்த புரிதல் நம்மிடையே குறைவாகவேஉள்ளது. இதன் பொருட்டு தெளிவு பெறுதல் பொருட்டு    கோவை,மசக்காளி பாளையத்தில்  உள்ள ” ஸ்ரீநிவாச மருத்துவமனை” யைச் சார்ந்த டாக்டர். K.ரெகுநாதன் M.B., B.S., D.P.M., மனநல மருத்துவர்அவர்களை சந்தித்தோம்.
Ragunathanதிரு. டாக்டர்.ரகுநாதன்  அவர்கள் தனது M.B.,B.S., மருத்துவப் படிப்பை திருநெல்வேலி  மருத்துவக்கல்லூரியில் படித்தவர்.  மணிபால்  கஸ்தூரிபாமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மன நலமருத்துவத்தில் பட்டயப் படிப்பு முடித்தவர். மனநல மருத்துவத்திலும் குடிபோதை மீட்பு சிகிச்சையிலும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிவருகிறார்.தற்போது மது, போதைப் பொருள்கள் மீட்பு மையத்தை கோவை, மசக்காளிபாளையத்தில்உள்ள “ஸ்ரீனிவாசா மருத்துவமனையில்” நடத்தி வருகிறார்.  மேலும் தொடர்புக்கு :  ஸ்ரீ நிவாஸ் ஹாஸ்பிடல், எண் 6, முல்லை நகர், மசக்காளிபாளையம், கோயம்புத்தூர்- 641 015  போன்: 0422-2574439, 2594439.
அவருடன் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்.
மனநலன்சார்ந்த வார்த்தைகளைநாம் பொதுவாகப் பயன் படுத்துகிறோம். அது தவறு.உதாரணமாக  டென்ஷன்என்பது மன இறுக்கம்,  எரிச்சலான மன நிலை, வெளிப்படுத்தப் பட முடியாத கோபம் போன்றவைகளைக் குறிப்பது.ANXIETYஎன்பது மனப்பதட்டத்தைக் குறிப்பது.ஸ்ட்ரெஸ்என்பது மன அழுத்தத்தைக் குறிப்பது. இவைகளைமனக் குறைபாடுகள் (MENTAL DISORDER) எனலாம்.
ஆனால் டிப்ரஷன் (DEPRESSION) என்பது மன சோர்வைக் குறிப்பது. இதை மன வருத்த நோய் அல்லதுமனத் தளர்ச்சி என்று குறிப்பிடலாம்.  கவனியுங்கள், இது ஒரு நோய்.
ஜாதி, மதம், ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், ஆப்ரிக்காக்காரர், அமெரிக்காக்காரர்என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் அநேகமாக உலகம்முழுவதும் ” டிப்ரெஷன் ” காணப் படுகிறது.
டிப்ரஷனில்  மூன்று வகையான நிலைகள் அல்லது கட்டங்கள் உள்ளன.
  • சாதாரண மனச் சோர்வு கட்டம் அல்லது நிலை (Mild Depressive Episode)
  • மிதமான மனச் சோர்வு கட்டம் அல்லது நிலை (Moderate Depressive Episode)
  • தீவிர மனச் சோர்வு கட்டம் அல்லது நிலை (Severe Depressive Episode)
இந்நோய்க்கான  அறிகுறிகள்:
dep
  1. எப்போதுமே சோகத்துடன் இருப்பது
  2. உடல் ரீதியாக சோர்ந்திருப்பது
  3. எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது
  4. எதிலும் நம்பிக்கையில்லாமல் இருப்பது
  5. நம்மால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை என்று எண்ணுவது அல்லது யாராலும் எனக்கு உதவ முடியாது என்று எண்ணுவது
  6. தாம் எதற்குமே லாயக்கில்லை என்று எண்ணுவது
  7. தற்கொலை எண்ணம் அல்லது அதைப் பற்றி பேசுவது,யோசிப்பது
  8. எப்போதுமே பதட்ட நிலையில் இருப்பது
  9. அகால் நேரத்தில் விழித்துக் கொண்டிருப்பது
  10. தனக்குள்ளே சுருங்கிக் கொள்வது அல்லது மூர்க்கமாக நடந்து கொள்வது
  11. எதிலுமே சந்தேகப்படுவது குறிப்பாக,தனது வாழ்க்கைத்துணையை
  12. செக்ஸில் ஈடுபாடு இல்லாமல் இருத்தல் 
  13. மகிழ்ச்சியான தருணங்களில்,நிகழ்ச்சிகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்ள முடியாமை
காரணங்கள்:
ஏற்கனவே குறிப்பிட்டபடி இது ஒரு நோய்.எனவே, நாம், நமது உடல், நமது சுற்றுப்புறம் ஆகிய எல்லாமே  காரணமாகலாம்.எனினும் பொது வானகாரணங்கள்
  • மூளையில் ஏற்படும்  இரசாயன மாறுதல்களினால் அல்லது இரசாயனக் குறைபாடுகளால் ஏற்படலாம்.
  • பரம்பரையாக வருவது
  • மன ரீதியான அழுத்தம் காரணமாக ஏற்படுவது, குறிப்பாக குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் பெரியவர்களானதும் நோயாக மாறலாம்.
  • சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை நேரில் பார்ப்பது , சாதி சமய சண்டைகளை நேரில் காண்பது போன்ற சமூக புறக் காரணிகளாலும் ஏற்படுகிறது.
  • தனக்கு நெருங்கியவர் தன் கண் முன்னே விபத்தில் இறந்து போவதுபோன்ற அதிர்ச்சி கரமான சம்பவங்களினாலும் ஏற்படலாம்
  • எப்போதோ தலையில் அடிபட்டது நாள் பட நாள்பட நோயாக உருமாறலாம்.
குணப்படுத்தும் முறைகள்
இது ஒரு மன நோய். எனவே ஒருதேர்ந்த மனநல மருத்துவரால் மட்டுமே குணப்படுத்த முடியும். மருத்துவரின்வழிகாட்டுதலின் படி மருந்துகள் தரப்பட வேண்டும். தொடர்ச்சியான மருத்துவகண்காணிப்பில் இருக்க வேண்டும்.
தவிரவும் மனநலம் சார்ந்ததொடர்ச்சியான Psycho Therapy  எனப்படும் மனநல சிகிச்சை முறை மூலம் குணப்படுத்தலாம். இந்த இரு வகையான சிகிச்சை முறைகளையும், நோயின் தன்மையை அறிந்துமருத்துவர் அளிப்பார்.
டிப்ரஷன் வராமல் நம்மால் தடுக்கமுடியாது. சர்க்கரை வியாதி போலவோ அல்லது இருதய நோய் போலவோ இதற்கு தடுப்புமுறைகள் கிடையாது. 
எனினும் சில நியமங்களை தொடர்ந்து கடை பிடிப்பதின் மூலம்நாம் நமது இயல்பான மன நிலையை பராமரிக்க முடியும்.
  1. தினந்தோறும் உடற்பயற்சி செய்யுங்கள்
  2. சமச்சீரான உணவு உட்கொள்ளும் முறையை ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள்
  3. முறையான நேரத்தில்உணவு உட்கொள்ளுங்கள்
  4. ஆரோக்கியமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் மனதார ஈடுபடுத்திக் கொண்டு மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.
  5. நமது அன்றாட நடவடிக்கைகளிலும் கூட திட்டமிட்டு பதறாமல் வேலை செய்ய பழகிக் கொள்ளுங்கள்
  6. ஏதாவது சமூக சேவையில் உ ங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இது ஒரு விதமான மன நிறைவைத் தரும்.
  7. உங்களின் நம்பிக்கையான நபர் அல்லது நபர்களிடம் உங்கள் மன எண்ணங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்.
  8. மிதமான அளவில் அடிக்கடி உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.
istock


ஆஸ்துமா அறிவோம்-டாக்டர் ஸ்ரீ காந்த்


காற்றோட்டமில்லாத ஒரு சிறிய அறையினுள் கதவைச் சாத்திக் கொண்டு உங்களால்எவ்வளவு நேரம் இருக்க முடியும்? 5 நிமிடம்? 10 நிமிடம்? கண்டிப்பாக அதற்குமேல் நம்மால் இருக்க முடியாது. ஆனால் நாள் முழுக்க மூச்சு விட முடியாமல்அனுபவிக்கும் அவஸ்தை ஒரு ஆஸ்துமா நோயாளிக்குத் தான் தெரியும்.
இந்தியாவில் ஒன்றரை கோடியிலிருந்து இரண்டு கோடிப் பேர் ஆஸ்துமாவினால்அவதிப் படுகிறார்கள். உலகம் முழுக்கவே சுமார் 30 கோடிப் பேர் இந்நோயின்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். உலகம் முழுக்க ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாகி இறந்து போகிறார்கள்.
ஆஸ்துமாவைப் பற்றிய நமது சந்தேகங்களை நுரையீரல் சிறப்பு நிபுணர் டாக்டர்.K.ஸ்ரீ காந்த்MD (Chest), FCCP (USA) அவர்களிடம் கொட்டினோம்.
photo SRIKANTH
டாக்டர்.K.ஸ்ரீ காந்த்MD (Chest), FCCP (USA) தனது M.B., B.S., கல்வியை சென்னை ஸ்டான்லிமருத்துவக் கல்லூரியில் பயின்றவர்.மேலும் நுரையீரல்  பற்றிய பட்ட மேற்படிப்பை சென்னை  மருத்துவக் கல்லூரியில்பயின்றார். மேலும் அமெரிக்க நாட்டின்  நுரையீரல்சிறப்பு மருத்துவர்சங்கத்தின் பட்டய உறுப்பினராகவும் உள்ளார். நுரையீரல் சம்பந்தமான நோய்களைகுணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 15 வருடங்களாக நுரையீரல்சம்பந்தமான துறையில் தனது சேவையைப் புரிந்து கொண்டிருக்கிறார்.மேலும்தொடர்புக்கு:
ஸ்ரீ பாலா மெடிக்கல் சென்டர்,
திருச்சி சாலை,
இராமநாதபுரம்,
கோவை – 641 045
போன்: 0422-2323333
அவரிடம்பேசியதிலிருந்து:
டாக்டர்ஆஸ்துமா மற்றும் அதன் சிகிச்சை முறை பற்றி நம்மிடையே பல்வேறு விதமான தவறான எண்ணங்கள் உள்ளன. பொதுவாக நோயாளிகளின்  சந்தேகங்கள் என்ன?
ஆஸ்துமாவைப் பற்றி நிறைய தவறான நம்பிக்கைகள் உள்ளன.
தவறான நம்பிக்கை 1.
ஆஸ்துமாவை திறம்பட குணப்படுத்த முடியாது.
உண்மை:
ஆஸ்துமாவை திறம்படவும்பாதுகாப்பான முறையிலும் குணப்படுத்த முடியும்.
தவறான நம்பிக்கை2: 
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் நலமாகவும், செயல்பாட்டுடனும் விளங்க முடியாது.
உண்மை:
முற்றிலும்தவறு.  ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை மேற்கொண்டுவிளையாட்டுகளிலும், பல்வேறு உடற்பயிற்சி துறைகளிலும் ஏன் ஒலிம்பிக்கில் கூடதங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்கள்.
தவறான நம்பிக்கை 3:
இன்ஹேலர்களை அடிக்கடி உபயோகப்படுத்துவது தவறு. நாம் அதற்கு அடிமையாக நேரிடலாம். இன்ஹேலர்களை உறிஞ்சுவதை கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.
உண்மை:
இதுவும் தவறான எண்ணம். இன்ஹேலர்களைஉபயோகிப்பதனால் நாம் அதற்கு அடிமையாக மாட்டோம். இது கடைசி ஆயுதம் அல்ல.உண்மையில் ஆஸ்துமாவைக் குணப்படுத்துவதில் முதன் முதலில் கையாள வேண்டியமருத்துவ முறை இது.
தவறான நம்பிக்கை 4:
இன்ஹேலர்கள் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
உண்மை:
முற்றிலும் தவறு. இன்ஹேலர்களை உறிஞ்சுவதன் மூலம்  பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை.
டாக்டர்ஆஸ்துமாவைப் பற்றிய பொதுவான தகவல் ஏதாவது?
ஆஸ்துமாஎன்ற கிரேக்கச் சொல்லுக்குப் பொருள் ‘ மூச்சில்லாமல்’ (Breathless) என்பதாகும். உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி உலகம் முழுக்கசுமார் 30 கோடிப் பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக நமது நாட்டில், இந்நோயின் தாக்கம்அதிகளவில் உள்ளது. ஆஸ்துமா அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நகர் மயமாதல்,சுற்றுச் சூழல் கேடடைதல், மாறும் வாழ்க்கை முறை போன்றவைமுக்கியப் பங்கு வகிக்கின்றன.
மாறும்வாழ்க்கை முறையை குறிப்பிடக் காரணம்அன்றாட வாழ்வில் நாம் அளவுக்குஅதிகமாகப் பயன் படுத்தும் உணவு பதப் பொருட்கள்,உணவுக்கு வண்ணம் சேர்க்கும்நிறமிகள் போன்றவையும் ஆஸ்துமா வளர்வதற்கு உதவுகின்றன. 
ஆஸ்துமா என்றால் என்ன?
ஆஸ்துமாஎன்பது   ஒரு நிலை. (Condition). மூச்சுப் பாதைகளை பாதிக்கின்ற நிலையைஆஸ்துமா என்கிறோம். மூச்சுப் பாதைகள் நமது நுரையீரலுக்கு காற்றைக் கொண்டுசெல்லும் மெல்லிய குழாய்கள். பல்வேறு காரணங்களால் மூச்சுப்பாதை (Airways)களை  சுற்றியுள்ள தசை இறுக்கமடைகிறது. இதனால் மூச்சுப் பாதைசுருங்கி விடும். மேலும் இதன் மென்மையான தோல் சிவந்து வீங்கிவிடும்.மற்றும் சளியையோ அல்லது சீழையோ உற்பத்தி செய்யும். இதன் காரணமாக மூச்சுப்பாதை மிகச் சுருங்கி எரிச்சலையும் கொடுக்கத் தொடங்கும். இந்த அறிகுறிகள்நம்மை ஆஸ்துமாவிற்கு இட்டுச் செல்லும்.
ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன?
பொதுவான அறிகுறிகள் என்னவெனில்,
  1. மூச்சுவிடத் திணறுதல் – Wheezing
  2. மூச்சுவிட முடியாமை
  3. இருமல் குறிப்பாக இரவு நேரங்களில்
  4. நெஞ்சில்  இருக்கமாயிருத்தல்
ஒருகுறிப்பிட்ட வகை ஆஸ்துமாவில் இருமல் மட்டுமே அறிகுறியாய் இருக்கும்.எனவேதொடர்ச்சியான இருமல் இருந்தால் வெறும் இருமல்தானே என்று அலட்சியப்படுத்தாமல்ஆஸ்துமா இருப்பதற்கு வாய்ப்புள்ளதா என்று தங்களின்மருத்துவரிடம் கலந்துஆலோசித்துத் தெளிவு பெறுங்கள்.
ஆஸ்துமாவிற்கு காரணம் என்ன டாக்டர்?
ஆஸ்துமா எந்த வயதிலும் வரலாம்.எனவே எது ஆஸ்துமாவை தூண்டுகிறது என்பதை அறிவது கடினம். இருந்த போதிலும் இதுவரை அறியப் பட்ட காரணங்கள்:
ஆஸ்துமாஅலர்ஜி சம்பத்தப்பட்ட நோயானதால் அலர்ஜியைத் தூண்டக்கூடிய பல்வேறுகாரணிகளும்ஆஸ்துமாவை வரவழைக்கின்றன.உங்களின் பெற்றோரில் ஒருவருக்கோஅல்லது இருவருக்குமோ ஆஸ்துமா இருந்திருந்தால் பெரும்பாலும் உங்களுக்கும்ஏற்படலாம்.
மாறிவரும் வாழ்க்கை முறைகள் குறிப்பாக வீட்டில் உணவில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் ஆஸ்துமா உண்டாகலாம்.
கர்ப்பிணிப்  பெண்கள் புகை பிடித்தால் குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கு அதிக சந்தர்ப்பம்உள்ளது. இந்தியப் பெண்கள் பெரும்பாலும் புகைப் பிடிப்பதில்லை.ஆனால் கணவரின்புகைப் பழக்கத்தால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப் படலாம்.
நாம் வேலை பார்க்கும் இடத்தில் தூசு  பல்வேறு  ரசாயனப் பொருட்களாலும் ஆஸ்துமா வரலாம்.
சுற்றுப்புறச் சூழல் கேடடைவதனாலும் ஆஸ்துமா வரலாம்.
ஆஸ்துமாவை தூண்டக்கூடிய காரணிகள் என்னென்னெ?
ஒவ்வொருவரின்ஆஸ்துமாவும் வேறு வேறானவை. மூச்சுப் பாதைக்கு எரிச்சலைக் கொடுக்கும்எவையும் ஆஸ்துமாவைத் தூண்டும். பொதுவான காரணிகளாக வீட்டில் இருக்கும் தூசுஉண்ணிகள் ,மகரந்தத் தூள் , நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளின் ரோமம், இறகு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
pollen allergies
ஆஸ்துமாவிற்கும்கரப்பான் பூச்சிக்கும் கூட சம்பந்தமிருப்பதாகக் கூறுகிறார்கள்.எங்கெல்லாம் கரப்பான் பூச்சிகள் அதிகமாய் உள்ளதோ அங்கெல்லாம் ஆஸ்துமாவின்அபாயம் அதிகமுள்ளதாகசமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
குளிர், புகை  கூட ஆஸ்துமாவை விரைவு படுத்தலாம்.
சிலமருந்துகள் உதாரணமாக ஆஸ்பிரின், சில வலி நிவாரணிகள், தீவிர இரத்தஅழுத்தத்திற்கு கொடுக்கப்படும் சில மாத்திரைகள் கூட ஆஸ்துமாவின்தாக்குதலுக்குக் காரணமாகின்றன.
ஆஸ்துமா எப்படி நமது வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்?
கட்டுப்படுத்தமுடியாத ஆஸ்துமா நமது சமூக வாழ்வில் பல்வேறு விதமான விளைவுகளைஏற்படுத்துகிறது. உதாரணமாக பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுத்தல், படிப்பில் கவனமின்மை போன்றவை நமது குழந்தைகளிடையே காணப் படும். வேலைக்குஅடிக்கடி விடுமுறை எடுத்தல், வேலையில் திறமைக் குறைவு போன்றவைபெரியவர்களைப் பாதிக்கும்.
ஆஸ்துமாவை எவ்வாறு மருத்துவ ரீதியாகக் கண்டறிவது?
spirometer
இதற்குஒரு சாதாரண பரிசோதனை போதும். Spirometer என்று அழைக்கப்படும் செயற்கைசுவாச கருவி மூலம் இதனை எளிதாகக் கண்டறியலாம்.இதன் மூலம் நமது நுரையீரலின்இயங்கு திறனைக் கண்டறியலாம். இந்தப்பரிசோதனைபரவலாக மேற்கொள்ளப் படுகிறது.இப்பரிசோதனையின் மூலம் ஆஸ்துமாவை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
  நம்முடைய ஆஸ்துமாவை நாமே கண்காணிக்க முடியுமா?
peak flow meter
மருத்துவமனைசெல்லாமல் நமது வீட்டிலிருந்தபடியே நமது ஆஸ்துமா நிலையைக் கண்காணிக்கமுடியும். இதற்கு ” Peak Flow Meter” என்ற கையடக்கக் கருவி உதவுகிறது.இந்தக் கருவியில் உள்ள துளையின் வாயிலாக நாம்
வேகமாகஊதும்போது நமது ஊது திறனை இக்கருவி காட்டுகிறது. ஒரு சிறிய டைரியில்காலையிலும் மாலையிலும் இந்த மீட்டர் ரீடிங்கை குறித்து வைப்பதன் மூலம்ஆஸ்துமா எந்த அளவிற்கு கட்டுப் பாட்டில் உள்ளது என்பதை அறிய முடியும். ஊதுதிறன் குறைந்தால் நாம் அதற்கேற்ப மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம்.குறிப்பாகச் சொல்லப் போனால் தெர்மா மீட்டர்,  BP அளவிடும் கருவிபோன்றவற்றோடு இதனை ஒப்பிடலாம்.
டாக்டர்ஆஸ்துமாவின் சிகிச்சை முறைகளைப் பற்றிக் கூறுங்களேன்?
கடந்த இருபது வருடங்களில் ஆஸ்துமாவிற்கான சிகிச்சை முறைகள் பல மடங்குமேம்பட்டுள்ளன. எல்லோராலும் விரும்பப் படும் முறை  “இன்ஹேலர்”தான் .இன்ஹேலரின் வாயிலாக மருந்து உறிஞ்சப் படும் போது அது நேரிடையாக நுரையீரலைஅடைந்து விரைவான நிவாரணத்தை தருகிறது.  இது ஊசி வழியாகவோ அல்லது  மாத்திரைவழியாகவோ செலுத்தப் படும் மருந்து அளவைக்  காட்டிலும்  குறைவே.மேலும், மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் மருந்து நேரிடையாக நுரையீரலை அடைகிறது.இரத்தத்தில் சேர்ந்து பின் நுரையீரலை அடைவதில்லை.  எனவே பக்க விளைவுகளைப்  பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை.
ஆஸ்துமாவிற்க்கான  மருத்துவ முறைகள் இரண்டு வகைப் படும்.
1. மீட்பு மருந்து முறை .
2. காப்பு மருந்துமுறை.
மீட்பு மருந்துமுறையில் மருந்து விரைவாகச் செயல்பட்டு ஆஸ்துமாவின்தொல்லையிலிருந்து நமக்கு நிவாரணம் தருகிறது. இந்த முறை ஆஸ்துமாதாக்குதலிலிருந்து ஒரு நோயாளியைக் காக்கிறது.
காப்பு மருந்துமுறை: இதன் பெயரே இதனை விளக்குகிறது இதன்  படி ஆஸ்துமாநோயால் பாதிக்ககப்பட்ட ஒருவர்  தொடர்ச்சியாக மருந்து உட்கொள்வதன் மூலம்அதன் அறிகுறிகளைத் தடுக்க முடியும்.இதில் முக்கியமான விஷயம் என்னவெனில்  நோயின்  அறிகுறிகள்  கொஞ்சம்  குறைந்தாலும் நாம் மருந்து உட்கொள்ளுவதைநிறுத்தி விடுவோம். அது முற்றிலும் தவறு. ஆஸ்துமா ஒரு ‘நாள்பட்ட  நோய்'(Chronic). சர்க்கரை நோய் போன்று இதற்கு தொடர்ச்சியான மருத்துவக்கண்காணிப்புத் தேவைப்படுகிறது. இந்நோய்க்கான சிகிச்சையை எப்போதுநிறுத்தலாம் என்பதை உங்கள் மருத்துவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆஸ்துமாவினால் ஏற்படும்மரணங்களுக்கு பெரும்பாலும் காரணமாய் இருப்பது சரியாகக் கணிக்கத் தவறுதல்குறைபாடுள்ள வைத்திய முறைகளை மேற்கொள்ளுதல் (Under Treatment),  குறிப்பிட்ட மருந்துகளை குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளாமல் இருப்பதுபோன்றவைதான்.
இன்றைய நவீன மருத்துவத்தில்ஆஸ்த்மாவை முழுமையாக குணப்படுத்தலாம். அவ்வாறிருக்க ஒரு ஆஸ்துமா நோயாளி ஏன்குறையுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும்பயப்படாதீர்கள்! ஆஸ்துமாவை  தடுக்கமுடியும்: வந்தால் குணப் படுத்த முடியும்.
ஆஸ்துமா சிகிச்சையில் பயன் படுத்தப் படும் மருந்துகளைப் பற்றிக் கூறுங்களேன்?
பொதுவாக ஆஸ்துமாவை குணப்படுத்த கோட்டிகோ ஸ்ட்ராயிட்
Cortico Steroids மருந்து இன்ஹேலர்  வழியாக தரப் படுகிறது.
டாக்டர்,  ஸ்ட்ராயிட் என்று சொல்கிறீர்கள். இது பாதுகாப்பானதா?
கவலையே வேண்டாம். ஆஸ்துமாவை குணப்படுத்த பயன்படுத்தப் படும் கோட்டிகோஸ்ட்ராயிட் நமது உடலில் இயற்கையாகவே உள்ள ஸ்ட்ராயிட்ன் பிரதியே. ஓட்டப்பந்தய வீரர்களாலும், உடலைக் கட்டாக வைத்திருக்க வேண்டி பயிற்சி செய்பவர்கள்பயன் படுத்தும் அனொபொலிக் ஸ்ட்ராயிட்களிலிருந்து  Anabolic Steroids முற்றிலும் மாறுபட்டது.
டாக்டர் ஆஸ்துமாவைப் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் ஏதாவது?
இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சி முடிவுகள்ஆஸ்துமாவிற்கும் குண்டாயிருப்பதற்கும் உள்ள உறவைப் பறை சாற்றுகின்றன.குறிப்பாக் குண்டாயிருக்கும் பெண்களுக்கு ஆஸ்துமா  வருவதற்கு அதிகசந்தர்ப்பங்கள் உள்ளன. இதைக் குறிப்பிடுவதற்குக்
காரணம் நமது வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம்  ஆஸ்துமாவைதடுக்க முடியும் என்பதே.இது எங்களின் மருத்துவர் குழு கோவை PSG மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நடத்திய ஆராய்ச்சியில் நிரூபணமாயிற்று. இந்தஆராய்ச்சி முடிவு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.
ஆஸ்துமாவினால்  பாதிக்கப் பட்டவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
ஒவ்வொரு வருடத்தின்  “மே” மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை “உலக ஆஸ்துமாதினமா”க அனுசரிக்கப் படுகிறது.ஆஸ்துமாவைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதே ” உலக ஆஸ்துமா தினத்தின்” நோக்கமாகும். இந்தவருடத்தின் மையப் பொருள் ” உங்களால் உங்கள் ஆஸ்துமாவைக் கட்டுப் படுத்தமுடியும்” என்பதே. இது இக்காலத்திற்கேற்றபடி மிகச் சரியானதாகும். மிகப்பெரிய விளையாட்டு வீரர்கள், இசை அறிஞர்கள், புகழ் பெற்ற அரசியல் வாதிகள்ஏன் அறிவியல் விஞ்ஞானிகள் கூட ஆஸ்துமாவினால் பாதிக்கப் பட்டு இருந்தாலும்அதை எவ்வாறு வெற்றிகரமாக எதிர் கொள்வது என்பதை அறிந்து வெற்றிகரமானமனிதர்களாக திகழ்ந்திருக்கிறார்கள்.
இன்றைய நவீன மருத்துவத்தில் ஆஸ்துமாவை  திறம்பட குணப்படுத்த முடியும். ஆஸ்துமாவினால் இறப்பு என்பது  அபூர்வமானதே!